கலைத் திருவிழாவில் கவிதை எழுதுதல் உள்ளிட்ட ஒரு சில போட்டிகளில் பள்ளி அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள முடியாத சூழலை மாற்றி கலந்துகொள்ள வழிவகுத்தார் Tams மாநில தலைவர்.
Siva Tam's Tpt.
கலைத் திருவிழாவில் கவிதை எழுதுதல் உள்ளிட்ட ஒரு சில போட்டிகளில் பள்ளி அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள முடியாத சூழலை மாற்றி கலந்துகொள்ள வழிவகுத்தார் Tams மாநில தலைவர்.
*நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலைத் திருவிழாவில் கவிதை எழுதுதல் உள்ளிட்ட ஒரு சில போட்டிகளில் பள்ளி அளவில், ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதை*
*(இப்போட்டிகள் மாநில கலைத் திருவிழா போட்டி பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது)*
*நாகை மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் மதிப்பிற்குரிய திரு கு.தியாகராஜன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில தலைவர் உடனடியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் மதிப்புமிகு. திரு.V. இராமேஸ்வர முருகன் அவர்களை தொடர்பு கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மீதும், குறிப்பிட்ட சில போட்டிகள் மீதும் காட்டப்படும் பாரபட்சத்தையும் மற்றும் கவிதை எழுதுதல் உள்ளிட்ட சில போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தி மாநில அளவில் நடத்தப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் மதிப்புமிகு இயக்குனர் அவர்களும் உடனடியாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து போட்டிகளிலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் அதே தலைப்பின் கீழ் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் எவ்வித தலைப்பையும் எவ்வித காரணம் இன்றியும் நீக்காமல் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதலை வழங்க அறிவுறுத்தி உள்ளார்*
*கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் அனைத்து வகை போட்டிகளிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் கண்டிப்பாக மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மாநில அளவில் நடைப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.*
*விரைவாக நடவடிக்கை எடுத்த மாநில தலைவர் மதிப்பிற்குரிய கு. தியாகராஜன் அவர்களுக்கும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உரிய நேரத்தில் தகுந்த வழிகாட்டுதலை வழங்கிய மதிப்புமிகு இயக்குனர் அவர்களுக்கும் மாணவர்கள் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க அனைத்து பொறுப்பாளர்கள் சார்பாகவும் நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்*
*நன்றி நன்றி நன்றி*
Comments
Post a Comment