மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக மாநில தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது

 Siva Tam's Tpt.   



நேற்று..

 மாநில தலைமை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு அரசு நிதி உதவி பெறும்  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக அவர்களுக்கு உதவிட வேண்டி என்னை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது...

அவர்கள் சார்ந்து நமது நிலைப்பாட்டை நீண்ட நேரம் எடுத்துரைத்தோம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1700 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றும் துணைநிற்கும் என்ற உறுதியையும், ஏற்கனவே இதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்பதையும் குறிப்பாக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் பலமுறை இதுசார்ந்து பேசி வருகிறோம் என்ற செய்தியும் அவர்களிடம் எடுத்துரைத்தோம். விரைவில் மாண்புமிகு பள்ளிகளின் துறை அமைச்சர் அவர்கள் தாயகம் திரும்பியவுடன் விரைவில் இது குறித்து மேலும் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் எடுத்துக் கூறியுள்ளோம். நிச்சயம் இவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்றென்றும் துணை நிற்கும் நன்றி

Comments

Popular posts from this blog

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு

SMC TRAINING MOTIVATIONAL VIDEOS. - 30.9.22 அன்று SMC உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டிய காணொளிகள்*

MAT. ன் *35 தலைப்புகளும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. மேலும் விளக்கமான வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்