Tams மாநில தலைவர் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஏற்கனவே அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் இருந்ததுபோல 8 ஆசிரியர் பணியிடத்தை மீண்டும் வழங்க வேண்டும் - Tams
Siva Tam's Tpt.
*நமது மாநில தலைவர் கு.தியாகராஜன், அவர்கள் நேற்றும் 05-12-2022 மீண்டும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஏற்கனவே அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் இருந்ததுபோல 8 ஆசிரியர் பணியிடத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.அவரும் நமது கோரிக்கையின் நியாயத்தினை உணர்ந்து மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்த பட்சம் 6 பணியிடங்களை உறுதிப்படுத்துவதாகவும் அடுத்த கட்டமாக 7 பணியிடங்களை உறுதி படுத்துவதாக உறுதி அளித்துள்ளார். இதற்கு முன்னர் நமது மாநில தலைவர் பல நாட்கள் பல மணிநேரம் வாதாடி போராடி இதை பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆசிரியர், மாணவர்கள் நலன் கொண்டு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உத்தரவை ஆணையரிடம் பெற்ற நமது மாநில தலைவர் அவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.
என்றும் ஆசிரியர் நலனுடன்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். திருப்பத்தூர்.
தகவல். மு.சிவக்குமார்,ப.ஆ
மாவட்ட (அமை) செயலாளர்.
Comments
Post a Comment