01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.*
Siva Tam's Tpt.
New TNSED Attendance App:
01.01.2023 முதல் புதிய TNSED ATTENDANCE செயலியை பயன்படுத்தி அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள வேண்டும்.*
இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.
ஏற்கனவே உள்ள Old TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும்.
Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedattendance.tnemis
பள்ளி/ஆசிரியர்களின் பழைய Username/password பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும்.
உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளுர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
புதிய செயலியில் CWSN மாணவர்களுக்கும் வருகைப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால், தனியாக sync செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவேடு கைபேசியில் (device) பதிவாகும். இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே update ஆகிவிடும்.
இணைய சேவை இல்லாத (internet connection) நேர்வுகளில் வருகைப் பதிவு மேற்கொண்ட பிறகு கீழ்க்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றிடல் வேண்டும்
i) Do not log out from the app
ii) Do not click on the sync
iii) Do not clear the app data or app caches
மேற்காண் நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர், மாணவர்களின் வருகைப் பதிவுகளை புதிய வருகைப் பதிவு செயலியில் 01.01.2023 முதல் பதிவேற்றம் செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Comments
Post a Comment