வேலூர் சிறப்பு நேதாஜிமார்க்கட் வரலாறு
வேலூர் நேதாஜிமார்க்கட் வரலாறு
நேதாஜி அங்காடி:
கட்டிடம் கட்டி முடிக்கபட்டது- 1868 (வேலூர் நகராட்சி உருவாக்கபட்டது-1866) இதற்கான அடிக்கல் அப்போதிருந்த கலெக்டர் மர்ஜோரிபாங்க்ஸ் மற்றும் நகராட்சி தலைவர் கான் பஹதூர் ஹபிபுல்லா சாஹிப் அவர்களால் நாட்டபட்டுள்ளது.
200 கடைகள் உருவாக்கப்பட்டு ஓட்டேரி தண்ணீர் திட்டம் வழியாக முதல் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டது- 1912. இந்த அங்காடிக்கு முதல் தண்ணீர் குழாய் அமைக்கபட்டது- 1927.
இந்த அங்காடியில் உள்ள மணிக்கூண்டு 1911 இல் இங்கிலாந்து அரசர்
5 ம் ஜார்ஜ் பதவியேர்ப்பு நிகழ்வை குறிக்கும் வகையில் கட்டப்பட்டது. அங்காடியில் உள்ள கல்வெட்டு ஒன்றில் வேலூர் கிராமத்தில் இருந்து 277 சிப்பாய்கள் முதல் உலக யுத்தத்தில் கலந்து கொண்டதாகவும் அதில் 14 உயிர் தியாகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அங்காடி முதல் தெரு விளக்கு அமைக்கபட்டது- 1932. வீடுகளுக்கு விரிவுபடுததபட்டது- 1934.
1942 இல் நேதாஜி தொடங்கிய தேசிய படை யை வரவேறக்கும் வகையில், வேலூர் நகர வர்த்தகர் சங்கம் இந்த அங்காடிக்கு நேதாஜி மார்க்கெட் என்று பெயர் சூட்டியது.
இது தமிழ் நாட்டிலேயே முதலில் கட்டப்பட்ட அங்காடி. சரித்திர புகழ் வாய்ந்தது.
Comments
Post a Comment