திருப்பதூரில் ஓர் ஆசிரியர் இல்லம் - விரைவில் ஜாக்டோ முடிவு
TPT JACTO செய்தி:-
17.12.15 அன்று நடைபெற்ற திருப்பத்தூர் Jactto கூட்டத்தில் நமது பகுதியில் அனைத்து ஆசிரியர்களுக்கு (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி) அதாவது JACTO TPT என்ற குடையின் கீழ் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்படுவது எனவும், மேலும் வேலூரில் ஆசிரியர் இல்லம் இருப்பதுபோல் திருப்பதூரில் ஓர் ஆசிரியர் இல்லம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருடைய மனதிலும் உருவானது. இந்த முயற்சி வெற்றி பெரும் விதமாக நாளை 23-12-2015 (புதன்) மாலை 5.00 அளவில் VSV நகராட்சி பள்ளியில் JACTTO கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அன்புடன்.
மு.சிவக்குமார். ப.ஆ.
ஜாக்டோ திருப்பத்தூர்.
மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்.
Comments
Post a Comment