தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு! ..பகுதி.2
தமிழ்நாடு காவல்துறை தோன்றிய வரலாறு! ..பகுதி.2
கோபாலசாமி அய்யங்கார் தலைமையில் தமிழ்நாடு போலீஸ் கமிஷன் உருவாக்கப்பட்டது!
தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்பு சிஐடி பிரிவு உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்து 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும் பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!
1976 – ஆவடியில் போலீஸ் போக்குவரத்து பணிமனை பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது! சிஐடி பிரிவில் பாதுகாப்புப் பிரிவு தொடங்கப்பட்டது!
.1979 - தமிழக கால்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! இதுவே பின்னர் கியூ பிரிவாக உருவெடுத்தது. 1973 - தமிழக காவல்துறையில் முதன் முதலாக பெண் காவலர்களும், பெண் சப் இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டனர்!
1976 – தமிழக காவல்துறையின் தலைவர் பதவியாக டிஜிபி பதவி உருவாக்கப்பட்டது! தமிழக காவல்துறையின் முதலாவது டிஜிபியாக ஸ்ட்ரேஸி நியமிக்கப்பட்டார்!
1981 - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டது!
1984 – சிஐடி வனப்பரிவு உருவாக்கப்பட்டது!
1989 - தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துடன் இணைக்கப்பட்டது! காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படடது!
1991 - காவல்துறை சிறைத்துறை தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்வதற்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது!
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் தனியாக செயல்படத் தொடங்கியது!
1992 - சிறப்பு பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது! தமிழகத்தின் முதலாவது அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னை ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்டது! படிப்படியாக மாநிலம் முழுவதிலும் இது விரிவுபடுத்தப்பட்டது!
1993 - சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது!
1994 – கடலோரக் காவல் படைப் பிரிவு உருவாக்கப்பட்டது!
1997- மதக் கலவரங்களைத் தடுத்த விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது!
2001 - புதிய நூற்றாண்டில் தமிழக காவல்துறை 91,331 போலீஸார் 11 சரகங்கள் 30 போலீஸ் மாவட்டங்கள், 2 இரயில்வே மாவட்டங்கள் 6 ஆணையரகங்கள், 189 துணை கோட்டங்கள், 287 சரக்கிள்கள், 1276 காவல் நிலையங்களுடன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. 2002 - காவலர் குறை தீர்ப்பு தினம் தொடங்கப்பட்டது!
சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தலைமையிடமாக கொண்டு ஜஜி தலைமையில் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. 2003 நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க ஒரு நடமாடும் காவல் நிலையம் உட்பட 80 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தொடங்கப்பட்டன!
2004 - பெண் போலீஸாரைக் கொண்ட தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் தொடங்கப்பட்டது! இந்தியாவிலேயே இதுதான் அனைத்து மகளிர் போலீஸ் பட்டாலியன் என பெயர் பெற்றதாகும்!
2005 - ல் செங்கை கிழக்கு காவல் மாவட்டம். சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது. 2006 – ஆசியாவிலேயே மிகப் பெரியதும். நவீனமானதுமான புழல் மத்திய சிறை திறக்கப்பட்டது!
2007 – சென்னை காவல்துறை 150 ஆண்டுகளைத் தொட்டது.
இப்படி எத்தனையோ காலகட்டங்களைத் தாண்டி நமது தமிழக காவல்துறை இன்று சீரும் சிறப்புமாக செயலாற்றி வருகின்றது!
எத்தனை ஆட்சிகள் மாறினாலும் எள்ளளவு குறையாது பணிகளை மேற்கொண்டு வருகிறது!
நன்றி-
போலீஸ் நியூஸ் பிளஸ்
நன்றி: பாலாஜி
Comments
Post a Comment